search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா?
    X

    இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா?

    ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    சென்னை:

    இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை சென்னையில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் இந்த டெஸ்ட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே நேற்று கூறும் போது, ‘சென்னை டெஸ்ட் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சில நேரம் சூழ்நிலையையும், மக்களின் உணர்வுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அங்கு நிலவும் சூழல் குறித்து அறிய தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்’ என்றார்.

    Next Story
    ×