search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம்
    X

    4-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம்

    காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது.
    மும்பை:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் காயம் அடைந்தார். கணுகாலில் ஏற்பட்ட காயத்தால் அவர் மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் விளையாடவில்லை.

    இந்த நிலையில் வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டூவர்ட் பிராட் விளையாடுவது சந்தேகம் என்று தெரிகிறது.

    காயம் குணமடைய அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காயத்தில் இருந்து முழுமையாக அவர் குணமடையவில்லை.

    இதுபற்றி இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் கூறுகையில், 4-வது டெஸ்ட் போட்டி தொங்குவதறகுள் ஸ்டூவர்ட் பிராட் உடல் தகுதி பெறுவார் என்று நூறு சதவீதம் என்னால் கூற முடியாது. பயிற்சியில் அவர் செயல்பாட்டை பார்த்து தான் கூற முடியும் என்றார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருந்திமான் சகா காயம் காரணமாக 3-வது டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவருக்கு பதில் இடம் பெற்ற பார்த்தீவ் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சகா காயத்தில் இருந்து மீண்டு வராததால் 4-வது டெஸ்ட் அவர் இடம் பெறுவது மிக குறைவு. இதனால் பார்த்தீவ் பட்டேல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×