என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: அஸ்வின், ஜடேஜா, சமிக்கு ஓய்வு
Byமாலை மலர்3 Dec 2016 6:23 AM GMT (Updated: 3 Dec 2016 6:23 AM GMT)
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்து இருக்கிறது.
இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.
டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டியும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க தேர்வு குழு முடிவு செய்து இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 4 முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் புத்துணர்வுடன் டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என்று கருதி தேர்வுக் குழு முடிவு செய்து இருக்கிறது.
இதனால் ஒரு நாள் போட்டி தொடரில் ஜெய்ந்த் யாதவ், குல்கர்னி ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் போட்டி தொடரில் ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்து இருக்கிறது.
இதில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது.
டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டியும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க தேர்வு குழு முடிவு செய்து இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்காக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 4 முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் புத்துணர்வுடன் டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என்று கருதி தேர்வுக் குழு முடிவு செய்து இருக்கிறது.
இதனால் ஒரு நாள் போட்டி தொடரில் ஜெய்ந்த் யாதவ், குல்கர்னி ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் போட்டி தொடரில் ஜனவரி 15-ந்தேதி தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X