search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர்
    X

    டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர்

    மொகாலியில் 26-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில், ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது டெஸ்ட் 26-ந்தேதி மொகாலியில் தொடங்குகிறது.

    விசாகப்பட்டினத்தில் நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் திணறி வருகிறார்கள். குறிப்பாக அந்த அணியின் 4-வது வீரராக களம் இறங்கும் பென் டக்கெட் நான்கு இன்னிங்சில் மூன்றில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார்.

    அவர் சுழற்பந்து வீச்சுக்கு திணறுவதால் அவரை நீக்கிவிட்டு ஒருநாள் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரை ஆடும் லெவனில் சேர்க்க இங்கிலாந்து அணி விரும்புகிறது. இதனால் மொகாலி டெஸ்டில் ஜோஸ் பட்லர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

    ஜோஸ் பட்லர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கடைசியாக இடம்பிடித்திருந்தார். அவர் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 630 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 30 ஆகும்.
    Next Story
    ×