search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 415-7
    X

    2-வது டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 415-7

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இந்தியா 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரனகள் குவித்தது. புஜாரா 119 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

    விராட் கோலி 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 167 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 351 ரன்னாக இருந்தது.

    அடுத்து வந்த சகா 3 ரன்னிலும், ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமலும் மொயீன் அலி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதனால் இந்தியா 363 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது.

    8-வது விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் புதுமுக வீரர் ஜயந்த் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்துள்ளது.

    அஸ்வின் 47 ரன்களுடனும், ஜயந்த் ஜாதவ் 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×