என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
கிறிஸ்ட்சர்ச்:
மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது. ஆனால் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. ‘டாஸ்’ கூட போட முடியாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்களே நடைபெறும் எஞ்சிய நாட்கள் ஆட்டத்தில் 98 ஓவர்கள் வரை வீசப்படும். இயல்பாக ஒருநாளில் 90 ஓவர் வீசப்படும்.
கிறிஸ்ட்சர்ச் நகரில் சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பீதி அடைந்தனர். இதனால் இந்த டெஸ்ட் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி போட்டியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தியது. ஆனால் மழை காரணமாகத் தான் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டது.
மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது. ஆனால் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. ‘டாஸ்’ கூட போட முடியாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த டெஸ்ட் போட்டி 4 நாட்களே நடைபெறும் எஞ்சிய நாட்கள் ஆட்டத்தில் 98 ஓவர்கள் வரை வீசப்படும். இயல்பாக ஒருநாளில் 90 ஓவர் வீசப்படும்.
கிறிஸ்ட்சர்ச் நகரில் சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பீதி அடைந்தனர். இதனால் இந்த டெஸ்ட் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி போட்டியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தியது. ஆனால் மழை காரணமாகத் தான் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டது.
Next Story






