search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினருடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை
    X

    ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினருடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை

    சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்குழுவினருடன் முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் நேரம் செல்லச் செல்ல தீவிரம் அடைந்து கொண்டே வருகின்றது.

    இந்நிலையில், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று 14 பேர் கொண்ட போராட்டக்குழுவினர் முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    அப்போது, மெரினாவில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×