கோடை காலத்திற்கு ஏற்ற தென்னிந்திய காலை சிற்றுண்டி வகைகள்
தக்காளி சாதம்
வெங்காயம், தக்காளி ,பச்சைமிளகாய், குடைமிளகாய் வேகவைத்த சாதம் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம். வெயிலுக்கு லேசான உணவாக இருக்கும்.
தயிர்சாதம்
காலை மதியம் இரவு என எந்த நேரத்திலும் சாப்பிடலாம். வயிற்றுக்கு இதமாக இருக்கும். வேகவைத்த சாதம், தயிர், பச்சைமிளகாய் வெங்காயம், மாதுளை பழமுத்துக்கள் கலந்து தயிர்சாதத்தை செய்யவேண்டும். அதனுடன் கடுகு, கருவேப்பிலை உளுந்தப்பருப்பை தாளித்து சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்.
ரவை ஊத்தப்பம்
மிக எளிய சிற்றுண்டி ரவை ஊத்தப்பம் தான். இதில் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
ஆப்பம்
ஆப்பம் குருமா அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடலாம். மெத்தென்ற ஆப்பத்தின் விளிம்புகள் மொறுமொறுவென இருப்பதால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். காய்கறி குருமா அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் செரிமானமாகும் உணவு என்பதால் கோடையில் தாராளமாக சாப்பிடலாம்.
ஓட்ஸ் இட்லி
ஓட்ஸ்சில் செய்யப்படும் இட்லி வழக்கமான இட்லியை விட சுவையாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும். தக்காளி புதினா தேங்காய் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னி இதற்கு சூப்பராக இருக்கும்.உடல் எடை குறைப்பதற்கும் ஓட்ஸ் உதவும்.