மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில், நெய் ஊற்றி சூடானதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு இதில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள மட்டன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவை சேர்த்து, மட்டன் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின்பு 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு குக்கரினை மூடி போட்டு மூடி விட்டு, 4 விசில் வரும் வரை காத்திருக்கவும். தற்போது நன்கு வெந்துள்ள மட்டனை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சிவப்பு மிளகாய், மல்லி விதைகள், கிராம்பு பட்டை, கடுகு ஆகியவை சேர்த்து நன்கு வறுக்கவும். இதன் சூடு ஆறிய பின்பு, மிஞ்சியில் போட்டுப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
7 முதல் 8 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து வறுத்து எடுத்தால் ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் தயார்.