ஸ்பூனில் சாப்பிடுகிறீர்களா..?

ஸ்பூனில் சாப்பிடுகிறீர்களா..?

Published on
கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன.
அப்படியிருக்க, ஸ்பூனை பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.
அதிலிருந்து மாறுபட்டு, கையால் சாப்பிடுவதால் சில நன்மைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, 'நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்'.
உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிர்ச்சியாக இருக்கிறதா?, திட நிலையில் இருக்கிறதா?, திரவ நிலையில் இருக்கிறதா..? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது.
நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை உணவு வாய்க்கு வந்ததும் தொடங்கிவிடுகிறது.
மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகின்றன.
ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com