வேறு பெயரில் இந்தியா வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் ஸ்மார்ட்போன்
Published on

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

அதன்படி கேலக்ஸி எப்42 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், எப்.ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

கீக்பென்ச் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலிலும் இடம்பெற்று இருக்கிறது. அதில் கேலக்ஸி வைடு 5 மற்றும் எப்42 5ஜி மாடல்களின் மாடல் நம்பர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது தெரியவந்துள்ளது. 

அந்த வகையில் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் பல்வேறு சந்தைகளில் வேறு பெயர்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மாப்ட்போன் புளூ நிறத்தில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com