பிளாக்ஷிப் மாடலுக்கான அப்டேட் நிறுத்திய சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது பிளாக்ஷிப் மற்றும் மிட் ரேன்ஜ் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக அறிவித்தது.
சாம்சங்
சாம்சங்
Published on

சாம்சங் நிறுவனம் 2017 ஆண்டு தனது கேலக்ஸி எஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. முற்றிலும் புது டிசைன், மெல்லிய பெசல்கள், உயர் ரக அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்8 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. சந்தையில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், சாம்சங் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான மென்பொருள் அப்டேட்டை நிறுத்தி இருக்கிறது.

சாம்சங் தனது பிளாக்ஷிப் மற்றும் மிட்-ரேன்ஜ் மாடல்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே மென்பொருள் அப்டேட் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மூன்று ஒஎஸ் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக சாம்சங் அறிவித்தது. 

எனினும், கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கு இரண்டு ஒஎஸ் அப்டேட் மட்டுமே கிடைத்தது. அறிமுகமாகும் போதே கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மாடல்கள் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருந்தது. இது 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, வளைந்த எட்ஜ்களை கொண்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com