தடுப்பூசி மையங்களுக்கு வழிகாட்டும் அரசு சாட்பாட்

இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான தடுப்பூசி திட்டம் விரிவான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வலைதளம் ஸ்கிரீன்ஷாட்
வலைதளம் ஸ்கிரீன்ஷாட்
Published on

இந்தியாவில் மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி 18 வயதுடையோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தளத்தில் பயனர் அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்கள் பற்றிய விவரம் வழங்கப்படுகிறது. எனினும், வாட்ஸ்அப் செயலியில் இயங்கும் மத்திய அரசின் MyGov Corona Helpdesk சாட்பாட் பொது மக்களுக்கு, அவர்களின் அருகாமையில் செயல்படும் தடுப்பூசி மையம் பற்றிய விவரங்களை வழங்குகிறது.

இந்த சாட்பாட் சேவையானது கொரோனா தொற்று குறித்து பரவும் போலி தகவல்களை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான பத்தே நாட்களில் இந்த சேவையை சுமார் 1.7 கோடி பேர் பயன்படுத்த துவங்கினர். இந்த சேவையில் தடுப்பூசி மையம் பற்றிய தகவல்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு ட்விட்டர் மூலம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com