

ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கென ஒப்போ பிரத்யேக டீசரை வெளியிட்டு இருக்கிறது.
முன்னதாக ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பின் சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.