மீண்டும்... மீண்டுமா..! ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல்

கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.
மீண்டும்... மீண்டுமா..! ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல்
Published on

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஜூன் மாதம் அதிரடியாக உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தன. இதனிடையே பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டது. இதனால் பலரும் பிஎஸ்என்எல்-க்கு மாறினர்.

இந்த நிலையில், ரீசார்ஜ் கட்டணத்தை மீண்டும் உயர்த்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த எந்த மொபைல் நிறுவனத்திற்கு மாறலாம் என யோசிக்க தொடங்கி உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com