என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan army"

    • ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது.
    • இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில் முக்கியமானது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.

    இதன் அடிப்படையில், இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்தான்.

    ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள ராணுவம். யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள ராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்.

    இனப்படுகொலை நடத்திய சிங்கள ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்' விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நீக்க ஐ.நா. சபையில் வற்புறுத்துவேன் என்று அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். #UN #MaithripalaSirisena
    கொழும்பு :

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    பெரும்பாலானோர் காணாமல் போனதற்கு இலங்கை ராணுவம், கடற்படை, போலீஸ் ஆகியவையே காரணம் என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக கண்டனங்கள் எழுந்ததால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, அங்கு செல்கிறது.



    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், சிறிசேனா 25-ந் தேதி பேசுகிறார்.

    இதுகுறித்து சிறிசேனா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களும், சில அரசு சார்பற்ற அமைப்புகளும் மனித உரிமை மீறல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதை நாங்கள் தடுத்ததுடன், நல்ல நட்புறவையும் உருவாக்கி உள்ளோம்.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும்போது, இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு வற்புறுத்துவேன். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண எங்களுக்கு சில சலுகைகள் அளிக்குமாறு கேட்டுக்கொள்வேன்.

    இதுதொடர்பாக விசே‌ஷ வேண்டுகோள் விடுப்பேன். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுத்துமூலமாகவும் கோரிக்கை விடுப்பேன்.

    இவ்வாறு சிறிசேனா கூறினார். #UN #MaithripalaSirisena
    ×