search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rare Information"

    • திபெத்தியர்கள் உப்பைப் போட்டு தேநீர் அருந்துவது வழக்கம்.
    • மனிதர்களைப் போலவே விலங்குகளின் உடல் நலனுக்கும் உப்பு தேவை.

    `உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழியை சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பை சேர்த்துவிடுகிறோம். ஆனால், `உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான், தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்' என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.

    அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) கலந்திருக்கிறது. இது போதாதென்று ரெடிமேட் தோசை மாவு போன்றவற்றில் பேக்கிங் சோடாவைப் போடுகிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர், பீட்ஸா போன்றவற்றிலும் அதிக உப்பைச் சேர்க்கிறார்கள். இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

    மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் நைட்ரேட், சோடியம் சாக்கரின், சோடியம் பைகார்பனேட், சோடியம் பென்சாயேட் போன்றவை உப்பின் பல வகைகள். இதில் ஏதாவது ஒன்று, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலும் சாஸ்களிலும் நிரம்ப இருக்கிறது.

    அவ்வாறு சமையலில் அளவாக சேர்த்து கொள்ளப்படும் உப்பு பற்றிய சுவையான தகவல் தொகுப்பு இதோ உங்களுக்காக...

    * உப்பு நீரில் வளரும் ஒரே தன்மை கொண்ட தாவரம், மாங்குரோவ் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளே.

     * கடல் நீரில் 35 சதவிகிதம் உப்பு இருப்பதால்தான், அதை குடிக்க முடிவதில்லை.

    * திபெத்தியர்கள் உப்பைப் போட்டு தேநீர் அருந்துவது வழக்கம்.

     * போலந்தில் வெலிஷா நகரில் உள்ள உப்புச் சுரங்கம் மிகப்பெரியது. இங்கு உப்பால் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன.

     * காஸ்பியன் கடல்தான் உலகிலேயே மிகப்பெரிய உப்பு ஏரி என அழைக்கப்படுகிறது.

    * குளோரினும், சோடியமும் உப்பில் அதிகம் இருப்பதால், அதை அதிகம் பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் உண்டாகும்.

    * உப்பு நீரில் வினாடிக்கு 1560 மீட்டர் வேகத்தில் ஒலி ஊடுருவிச் செல்லும்.

    * மனிதர்களை போலவே விலங்குகளின் உடல் நலனுக்கும் உப்பு தேவை. ஆனால், இது தாவரங்களுக்கு நஞ்சு.

    * தினமும் 4 கிராம் உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்வது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவுக்கட்டுப்பாட்டு.

    * உலகில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. ஆண்டுக்கு 40.3 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது. சீனா (32.9),

    ஜெர்மனி (17.7), இந்தியா (14.5), கனடா (12.3) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    இந்து கோவில்களில் உள்ள சில அரிய வழிபாட்டு முறைகளையும், தவல்களையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    காவி உடையில் விநாயகர்

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த அம்மன் சன்னிதியின் பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த விநாயகர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகப்பெருமான், பிரம்மச்சாரி என்பதால் இப்படி காவி உடை அணிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

    மும்மூர்த்திகளின் இசை

    கடலூர் மாவட்டம் திருத்திணை தலத்தில் நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு கீழே திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மதேவர் மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார்கள். இருவரது இசைக்கும் ஏற்ப, இறைவன் நடனமாடும் வகையில் அந்த அமைப்பு இருக்கிறது. இசையில் சிறந்த இடத்தைப் பிடிக்க நினைப்பவர்கள், இந்த சன்னிதியில் வந்து நடராஜரையும், பிரம்மதேவரையும், திருமாலையும் வணங்கி வழிபட்டுச் செல்லலாம்.

    அமிர்த கலசத்துடன் கருடன்

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருத்தண்கால். இங்கு அமிர்த கலசம், நாகம் ஏந்திய கைகளுடன் கருட பகவான் காட்சி தருகிறார். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும். தன்னுடைய தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காக, இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்களிடம் கொடுத்தார் கருடன். அந்த கதையை நினைவு கூரும் வகையில் இந்த வடிவம் இருப்பது சிறப்புக்குரியதாகும்.

    கொடி மரத்தின் வெளியே நந்தி

    பொதுவாக அனைத்து ஆலயங்களிலும், கொடிமரத்தின் அருகிலேயே நந்தி பகவான் வீற்றிருப்பார். ஆனால் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் திருத்தலத்தில் கொடிமரத்திற்கு வெளிப்பகுதியில் நந்தி இருக்கிறார். பக்தர் ஒருவரின் உயிரை எடுக்க வந்த எமதர்மனை, இத்தல நந்தி விரட்டியதாக தல வரலாறு சொல்கிறது. மீண்டும் எமதர்மன் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான், நந்தியம்பெருமான் கொடிமரத்திற்கு வெளிப் பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    ×