search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Picasso painting"

    பிரான்சில் திருடப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிகாசோ ஓவியம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நெதர்லாந்தில் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்டுள்ளார். #PicassoPainting
    ஆம்ஸ்டர்டம்:

    உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை தீட்டினார்.

    சவுதி அரேபியாவை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் இதனை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார். ஆனால் கடந்த 1999-ம் ஆண்டு அவர் தனது சொகுசு கப்பல் மூலம் பிரான்ஸ் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் அவரிடம் இருந்து இந்த ஓவியத்தை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த ஓவியம் நெதர்லாந்தில் கிடைத்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டமை சேர்ந்த கலை துப்பறிவாளரான ஆர்தர் பிராண்ட் என்பவர் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த ஓவியத்தை மீட்டுள்ளார்.

    இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பதில் சுமார் ரூ.193 கோடி) இருக்கும் என கூறும் ஆர்தர் பிராண்ட், இந்த ஓவியம் தன் கைக்கு வருவதற்கு முன் கள்ளச்சந்தை மூலமாக 10-க்கும் மேற்பட்டோரிடம் கை மாறி இருக்கிறது என்றும் கூறினார்.  #PicassoPainting
    நெதர்லாந்து நாட்டில் உள்ள மியூசியத்தில் இருந்து 2012ம் ஆண்டு திருட்டுபோன பிகாசோ ஓவியம் 6 ஆண்டுகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #PicassoPainting
    புசாரெஸ்ட்:

    உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் உள்ள குன்ஸ்தல் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த பிகாசோவின் 7 ஓவியங்கள் , 2012-ம் ஆண்டு திருட்டு போனது. இதையடுத்து தனி குழு அமைக்கப்பட்டு ஓவியங்களை மீட்பதற்கான பணி நடைபெற்றது.

    ஓவியங்களை திருடிய வழக்கில் தொடர்புடைய ருமேனியர்கள் கைது செய்யப்பட்டு 2014ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், திருட்டுபோன ஓவியங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.



    இந்நிலையில், திருட்டு போன ஓவியங்களில் ஒரு ஓவியம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான மீரா பெட்டிகு என்பவர் இதனை கண்டுபிடித்து புசாரெஸ்டில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு 9 லட்சத்து 5 ஆயிரம் டாலர்கள் ஆகும்.

    தற்போது ருமேனிய அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ள அந்த ஓவியம், பிகாசோவின் ஓவியம்தானா? என உறுதிப்படுத்தப்பட்டபிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். #PicassoPainting

    ×