உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்றும் டிரா

முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார்.3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்றும் டிரா
Published on

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ்- டிங் லிரென் இடையிலான 9-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது/ World Chess Championship as the ninth game between Indian challenger D Gukesh and defending champion Ding Liren of China ended in yet another draw to still level on points here on Thursdayஉலக செஸ் சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜி. குகேஷ்- சீனாவின் டிங் லிரென் இடையே சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. 8 சுற்றுகள் முடிவில் இரண்டு பேரும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 8 சுற்று போட்டிகளில் இருவரும் தலா ஒரு சுற்றில் வெற்றி பெற்றிருந்தனர். மற்று 4 சுற்றுகளும் டிராவில் முடிந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 9-வது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. இதனால் இருவரும் தலா 4.5 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

நாளை ஓய்வு நாளாகும். நாளைமறுதினம் 9-வது சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மொத்தம் 14 சுற்றுகள் வரை போட்டி நடைபெறும். 14 சுற்றுகள் முடிவில் இருவரும் சமமான புள்ளிகள் பெற்றிருந்தால், அதன்பின் வெற்றியை தீர்மானிக்க faster time control கடைபிடிகக்ப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டம் வெல்வார்கள்.

முதல் சுற்றில் டின் லிரென் வெற்றி பெற்றிருந்தார். குகேஷ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். 2-வது, 4வது, 5-வது, 6-வது, 7-வது மற்றும் 8-வது சுற்றுகள் ஏற்கனவே டிராவில் முடிந்திருந்தன.

54-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் போட்டியை முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com