பத்திரமாக நாடு திரும்பினார் பி.வி. சிந்து

துபாயில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்தார்.நன்றாக கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றி.
பத்திரமாக நாடு திரும்பினார் பி.வி. சிந்து
Published on

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன. இதன் காரணமாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து  துபாயில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்தார்.

கடந்த சில நாட்களாக துபாயில் சிக்கித்தவித்த நிலையில், பி.வி. சிந்து பத்திரமாக நாடு திரும்பியதாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பத்திரமாக நாடு திரும்பினேன், பெங்களூரு வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன். கடந்த சில நாட்கள் மிகவும் தீவிரமாகவும், நிச்சயமற்றதாகவும் இருந்தன, ஆனால் என் வீட்டிற்குத் திரும்பியதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருக்கிறேன்.

நம்பமுடியாத தரைப்படை குழுவினர், துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியேற்ற மற்றும் மிகவும் கடினமான நேரத்தில் எங்களை நன்றாக கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றி. அவர்களது தொழில்முறை அணுகுமுறையை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அர்த்தமுள்ளதாக இருந்தன. இப்போதைக்கு இது, ஓய்வெடுக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் கண்டறியும் நேரம்," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com