அரபிக்கடலில் 100 அடி ஆழத்தில் மெஸ்சியின் கட்அவுட்டை வைத்த கேரள ரசிகர்கள்

இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர். அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.
அரபிக்கடலில் 100 அடி ஆழத்தில் மெஸ்சியின் கட்அவுட்டை வைத்த கேரள ரசிகர்கள்
Published on

உலகக் கோப்பை கால்பந்து 2022-ல் அர்ஜென்டினா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பதிவுகளால் சமூக ஊடகத் தளங்கள் நிரம்பி வழிகின்றன. மகிழ்ச்சியில் திளைத்த லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடிவருகின்றனர். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர்.

அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.

அந்த வகையில், கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் குழு கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை உருவாக்கி புதுமையான முறையில் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

முகமது ஸ்வாதிக் என்ற இந்த ரசிகர், 'உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் மெஸ்சியின் கட்அவுட்டை கடலில் 100 அடி ஆழத்தில் வைப்பேன் என்று முன்பே கூறியிருந்தார். அதேபோல், செவ்வாய்கிழமை குரோஷியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, முகமது ஸ்வாதிக் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com