பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம்- தோல்வி குறித்து சூர்யகுமார் கருத்து

76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.சிறிய பார்ட்னர்ஷிப் கூட அமைக்க முடியவில்லை.
பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம்- தோல்வி குறித்து சூர்யகுமார் கருத்து
Published on

சென்னை:

தென் ஆப்பிரிக்காவுடனான தோல்விக்கு பவர்பிளே விக்கெட்டுகளே காரணம் என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.

போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார், "180-185 ரன்களை துரத்தும்போது பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை வெல்ல முடியாது, ஆனால் அதே பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை இழக்கலாம்.

நாங்கள் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். அதனால் சிறிய பார்ட்னர்ஷிப் கூட அமைக்க முடியவில்லை. இது விளையாட்டின் ஒரு பகுதி. இதிலிருந்து பாடம் கற்று பலமாக திரும்புவோம்," என்றார்.

அடுத்து இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com