அவுட் ஆகி சோகத்துடன் வெளியேறிய போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி- நெகிழ்ச்சி வீடியோ

முதல் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆனார்.இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது.
அவுட் ஆகி சோகத்துடன் வெளியேறிய போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி- நெகிழ்ச்சி வீடியோ
Published on

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 9 ரன்னிலும் கோலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.

முதல் போட்டியிலும் டக் அவுட் ஆன விராட் கோலி இந்த போட்டியிலும் டக் அவுட் ஆனதால் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனை பார்த்த ரசிகர்கள் எத்தனையோ போட்டி எங்களை ரசிக்க வைத்திருக்கிறாய் இது பரவாயில்லை என்பது போல அவருக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதனால் நெகிழ்ந்து போன கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கையை மேலே தூக்கி காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com