U19 உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின . முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.
U19 உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
Published on

16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.

16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதின .

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. இதையடுத்து 311 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com