

ஐதராபாத்:
ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.
முதல் ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. 2வது ஓவரில் 2வது ஓவரில் 14 ரன்னும் கிடைத்தது.
3வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட் 21 ரன்கள் கிடைத்தது. 4வது ஓவரில் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. இதனால் பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.
ஐதராபாத் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 21 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார்.