

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்நிலையில், முதலாவதாக களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன்படி ஐதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.