ராஜஸ்தானிடம் தோல்வி - ஏ.பி.டி.யை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் மீது கோலி பாய்ச்சல்

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 30 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், பேட்ஸ்மேன்களை கேப்டன் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். #IPL2018 #RRvRCB #Kohli
ராஜஸ்தானிடம் தோல்வி - ஏ.பி.டி.யை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் மீது கோலி பாய்ச்சல்
Published on

ஜெய்ப்பூர்:

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தோம். அதன் பிறகு இந்த மாதிரி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது எங்களுக்கு புதுமையாகவே தெரிந்தது.

பேட்டிங்கில் மிடில்வரிசையை வலுப்படுத்த விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. களத்தில் நீடிக்கும் மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com