

2026 ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன நடக்க போகிறது என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாடுவாரா இல்லை முழு நேர வீரராக களமிறங்குவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஐபிஎல் தொடரில் முதல் 2 வாரங்கள் தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தசைப்பிடிப்பு காரணமாக தோனி சிகிச்சை பெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சென்னை அணியின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.