கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் அதிரடி.. நெதர்லாந்துக்கு 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

கேப்டன் ரோகித் சர்மா 61 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் அதிரடி.. நெதர்லாந்துக்கு 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அபாரமான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 61 மற்றும் 51 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 51 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. போட்டி முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்களை குவித்தது. ஷ்ரேயஸ் அய்யர் 128 ரன்களுடனும், சூர்ய குமார் யாதவ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல் 102 ரன்களை குவித்தார். நெதர்லாந்து சார்பில் லீட் 2 விக்கெட்டுகளையும், மெக்கெரீன், மெர்வே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com