இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 22 பிப்ரவரி 2025

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 22 பிப்ரவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மாசி-10 (சனிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: நவமி காலை 10.46 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: கேட்டை பிற்பகல் 3.22 மணி வரை பிறகு மூலம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ சைலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மகிழ்ச்சி

ரிஷபம்-கடமை

மிதுனம்-கட்டுப்பாடு

கடகம்-உவகை

சிம்மம்-உண்மை

கன்னி-ஆதரவு

துலாம்- பயணம்

விருச்சிகம்-செலவு

தனுசு- வரவு

மகரம்-மகிழ்ச்சி

கும்பம்-கீர்த்தி

மீனம்-வெற்றி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com