தலகோணா சித்தேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா

கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
தலகோணா சித்தேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா
Published on

திருப்பதி மாவட்டம் எர்ராவாரிபாளையம் மண்டலம் தலகோணா கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.

அங்கு உயரமான மலைகளில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். சுற்றுலா பயணிகளும் வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்.

கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டிக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் நேரில் அழைப்பிதழை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com