என் மலர்tooltip icon

    வழிபாடு

    புரட்டாசி- மகாலட்சுமி விரதம்
    X

    புரட்டாசி- மகாலட்சுமி விரதம்

    • திருமகள் துதிப்பாடல்களை படித்து திருமகளை வழிபட்டு வந்தால் நம் வறுமைகள் நீங்கும்.
    • தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இது.

    ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து திருமகள் துதிப்பாடல்களை படித்து திருமகளை வழிபட்டு வந்தால் நம் வறுமைகள் நீங்கும். வாழ்கைக வளம் பெறும்.

    இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து லட்சுமி ஸ்தோத்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.

    மேலும் தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகியயாவையும் நீங்கி புது நம்பிக்கை பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    Next Story
    ×