கன்னியாகுமரி அருகே வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

நாளை வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 3-ந்தேதி முருகன் ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி அருகே வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
Published on

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

விழாவில் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு அலங்காரம், 6 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பரமார்த்தலிங்கபுரம் சீதாலட்சுமி பொன்னுசாமி, காமராஜர் நகர் தாமரைசெல்வி வேல்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைக்கிறார்கள். தொடர்நது 6.30 மணிக்கு நடைபெறும் சமய உரை நிகழ்ச்சிக்கு கவிஞர் ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார். இதில், தாணு மூர்த்தி, கவிஞர் ராஜன் ஆகியோர் "கந்தன் கருணை" என்ற தலைப்பில் உரை ஆற்றுகின்றனர். நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடக்கிறது.

3-ந்தேதி தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி ஊர்வலமானது பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தளத்தை சென்றடைகிறது.

அங்கு உள்ள நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாயில் இரவு 7 மணிக்கு முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், வான வேடிக்கை, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சமய கருத்தரங்கு நடக்கிறது. கருத்தரங்குக்கு மயூரி சீதாராமன் தலைமை தாங்கிகிறார். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் "வள்ளி தெய்வானை திருமணம்" என்ற தலைப்பிலும், ரேணுகா ராமச்சந்திரன் "கந்தபுராணம் ஆராட்டு" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாளில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பொன்னுசாமி, வேல்முருகன், குமாரசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com