குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கொடிமரம் உள்ளிட்ட அனைத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது. விநாயகர்பூஜை, வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டது.
குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக நடத்தப்படும் பாலஸ்தாபன பூஜை நடந்தது.

இந்த பூஜையையொட்டி விநாயகர்பூஜை, வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து விமானம், மூலஸ்தான சுவாமிகள், பரிவார மூர்த்திகள், கொடிமரம் உள்ளிட்ட அனைத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது.

பூஜையினை முத்துராமன் பட்டர், கார்த்திக் பட்டர் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com