தேவசகாயம் மவுண்ட் புனித லூர்து அன்னை கெபி அர்ச்சிப்பு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

பழைமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது. இரவு அன்பின் விருந்து நடந்தது.
தேவசகாயம் மவுண்ட் புனித லூர்து அன்னை கெபி அர்ச்சிப்பு விழா: ஏராளமானோர் பங்கேற்பு
Published on

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி புனிதர் தேவசகாயம் ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. அதோடு இங்கு புனித லூர்து அன்னை கெபியும் அமைக்கப்பட்டுள்ளது. பழைமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது. தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை பிரைட் தலைமை தாங்கினார். இணைபங்குதந்தை ரெட்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், புனித லூர்து அன்னை கெபியை அர்ச்சித்தார். தொடர்ந்து குறும்பனை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள், பங்கு பேரவை பொருளாளர் பென்சிகர், துணைச்செயலாளர் சகாயரூபிலெட், பங்கு பேரவை முன்னாள் துணைத்தலைவர் பயஸ் ராய், கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இரவு அன்பின் விருந்து நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்கு தந்தை ரெட்வின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com