கண்ணுகுடி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதியல் தூக்குதேர் திருவிழா

இன்று கலைநிகழ்ச்சி நடக்கிறது. நாளை திருவிளக்கு பூஜை நடக்கிறது.
கண்ணுகுடி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதியல் தூக்குதேர் திருவிழா
Published on

தஞ்சை மாவட்டம் கண்ணுகுடியில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதியல் தூக்கு தேர் திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி சீர்காழி ராம்ராஜ் பாகவதர் வழங்கும் அர்ச்சனன் தவசு நாடகம் நடைபெற்றது. 18-ந்தேதி அரவோன் களப்பலி நாடகம் நடைபெற்றது.

நேற்று காலை 10 மணிக்கு லண்டன் வாழ் நண்பர்கள் வழங்கும் தமிழர் பண்பாட்டு கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு படுகளம் கூந்தல் முடித்தல் நாடகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வாணவேடிக்கையுடன் தேர் உலா வருதலும், 5 மணிக்கு தீமிதியில் தூக்கு தேர் திருவிழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் கலைநிகழ்ச்சி நடக்கிறது. நாளை(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், டிஜிட்டல் மகாபாரதமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கண்ணுகுடி பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com