சுவாமி ஐயப்பன் பயோடேட்டா

சபரிமலைக்கு மாலை அணிஞ்சு போறதுல எவ்வளவோ சிறப்பான அம்சங்கள் இருக்கு. மாலை போட்டு விரதமிருக்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சுப் பார்த்துக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கு.
ஐயப்பன்
ஐயப்பன்
Published on

1. திருநாமங்கள் - அரிஹரசுதன், சாஸ்தா, மணிகண்டன், மாசாத்தான், கண்டன் சாத்தன், சாத்தப்பன், ஐயனார்

2. கேரளத்தில் திரு அவதாரம் செய்தது - கொல்லம் ஆண்டு 79 (கி.பி.803)

3. பெற்றோர் - சிவன்-மோகினி உருக்கொண்ட திருமால்

4. பிறந்தநாள் - மார்கழி மாதம், சனிக்கிழமை, பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், விருச்சிக லக்னம் கூடிய சுபதினம்.

5. சகோதரர்கள் - கணபதி, கந்தன், ராஜராஜன் (பந்தள மன்னரின்மகன்)

6. மூலமூர்த்தி - பூரணை- புஷ்கலை

7. திருக்குமாரர் - சத்யகன் (சிவனின் ஒரே பேரன்)

8. நிலவுலக அவதாரம்    பெற்றோர் - ஜெயந்தன்- பந்தன அரசகுமாரி

9. அவதார நோக்கம் - மகிஷிவதம்

10. திருநாமம் - மணிகண்டன்

11. வளர்ப்பு தந்தை - பந்தள மன்னன்- ராஜசேகரன்

12. நண்பர் - வாபரர் (இஸ்லாமியர்)

13. விரும்பி உறைவது - சபரி பீடம்

14. பிற ஆலயங்கள் - அச்சன்கோவில், ஆரியங்கா, எருமேலி, காந்தலை

15. உடன் பிறந்தோர் - விநாயகர், முருகன், பந்தன மன்னன் குமாரன்

16. பிடித்தது - தெய்த்தேங்காய், இருமுடி

17. விரும்புவது - சரணகோஷம்

18. சிறந்த திருநாள் - மகரஜோதி, தை முதல்நாள்

19. திருக்கோலம் - யோக நிலை

20. திருக்கரங்கள் - இரண்டு மட்டுமே

21. ஆயுதங்கள் - ஏதும் இல்லை

22. ஆற்றல் - திருமாலின் காத்தல், சிவனின் அழித்தல்

23. அவதார பலன் - சைவ வைணவ ஒற்றுமை

24. அருளிப்பாடு - மன்னித்து வாழ்விப்பது

X

Maalai Malar
www.maalaimalar.com