நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது. நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது.
வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தபோது எடுத்த படம்.
வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தபோது எடுத்த படம்.
Published on

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடக்கிறது

விழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நந்திதேவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் சுவாமி-அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.

பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகனங்கள் பஞ்ச வாத்ய இசையில் மங்கள வாத்யங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

கோவில் நின்ற சீர்நெடுமாறன் கலையரங்கத்தில் ஆன்மிக பக்தி சொற்பொழிவு, பேராசிரியர் ஞானசம்பந்தனின் தமிழ் இனிமை பட்டிமன்றம் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி நடந்தது. தேர் இழுப்பதற்கான வடம், லோடு ஆட்டோகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு, தேரில் பொருத்தும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com