

ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசிக்கு சூரியன், புதன், சனியின் பார்வை உள்ளது. கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ATM கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். பொருளாதார விஷயத்தில் கவனம் செலுத்தி விரயத்தை சேமிப்பாகவோ, சுப விரயமாகவோ மாற்ற முறையான திட்டமிடல் தேவை. குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு கடனை அடைக்க, மறுகடன் வாங்குவது அல்லது பழைய கடனை அடைக்க, புது கடன் வாங்குவது என்று கடனுக்கு மேல் கடன் கூடிக்கொண்டு போகும். சிலருக்கு விருப்ப விவாகம் நடக்கும். 17.6.2026 அன்று காலை 8.13 முதல் 19.6.2026 அன்று காலை 10.7 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். வியாழக்கிழமை சுண்டல் தானம் வழங்கவும்.
திருமணத் தடை நீங்கும் வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது.தற்போது குடும்ப ஸ்தானத்தில் ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படும். சுய ஜாதக ரீதியாக ராகு,கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். சிலருக்கு விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது.கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக் கூர்மை கூடும்.அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். 19.6.2026 அன்று காலை 10.7க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் காரிய வெற்றியைத் தரும். அரசியலில் உள்ளவர்களுக்கு இது நெருக்கடியான நேரம். சனிக்கிழமை எள்ளுருண்டை தானம் வழங்கவும்.
புண்ணிய பலன்கள் மிகுதியாகும் வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை உள்ளது. இது புத ஆதித்ய யோகமாகும். கற்ற கல்வியால் வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள்.அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி கிடைக்கும்.அரசாங்க காரியங்களில் இலாபமும் அனுகூலமும் ஏற்படும். கூலித் தொழிலாளிகளின் நிலமை சீராகும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். உயர்ந்த ரக வாகன வசதி அமையும்.பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், அதிக கடன் வாங்கி சமயத்தில் சிரமப்படுவார்கள். எதிரிகள் தொல்லை குறையும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் வம்பு வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும்.மாணவர்களுக்கு இரவும் பகலும் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி,சளி இருமல் போன்ற சிறுசிறு அசவுகரியம் இருக்கும். சனிக்கிழமை எள் சாதம் வழங்கவும்.
விபரீத ராஜயோகமான நேரம். ராசி அதிபதி குருபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். ஜோதிடம், கலைத்துறை, வங்கித்துறை, பங்குச்சந்தை, வணிகம் போன்ற பல துறைகளின் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். தகவல் தொடர்பு சாதனங்களை மூலம் வருமானம் உண்டாகும். எதிர்பாராத யோகத்தால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். அதிர்ஷ்டப் பணம், லாட்டரி, உயில் சொத்து, பங்குச் சந்தை ஆதாயம் கிடைக்கும். தொட்டது துலங்கும். சிறிய உழைப்பில் பெரிய வருமானம், ஆதாயம் உண்டாகும். குலதெய்வ அனுகிரகம், பூர்வீகச் சொத்து ஆதாயம் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு தவறான காதல், பங்குச் சந்தையால் வாழ்க்கைப் பாதையை தடம் புரளும். சிலருக்கு வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் இருக்கும். அலைச்சல் டென்ஷன் சற்று அதிகமாகும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். ஜென்மச் சனியால் திருமணம் தடைபடாது. கோச்சாரம் சாதகமாக உள்ளது. அதிகப்படியான திருமணம் நிச்சயமாகும். வியாழக்கிழமை கடலை உருண்டை தானம் வழங்கவும்.