பிரபஞ்சத்தில் 14 உலகங்களும், அங்கு வசிப்பவர்களும்...

இந்த பிரபஞ்சத்தில் இறைவன் உருவாக்கியதாக கருதப்படும் 14 உலகங்களையும், அங்கு வசிப்பவர்கள் பற்றியும் இங்கே பார்ப்போம்.
சிவன்
சிவன்
Published on

ஈரேழு (பதினான்கு) லோகங்கள் என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இந்த பிரபஞ்சத்தில் பூமி மற்றும் அதற்கு மேல் பகுதியில் 7 உலகங்களும், பூமிக்கு கீழே 7 உலகங்களும் இருப்பதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அதன்படி இறைவன் உருவாக்கியதாக கருதப்படும் அந்த 14 உலகங்களையும், அங்கு வசிப்பவர்கள் பற்றியும் இங்கே பார்ப்போம்.

* சத்தியலோகம் - பிரம்மதேவனின் வசிப்பிடம்

* தபோலோகம் - தேவதைகள்,

* ஜனோலோகம் - பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள்

* சொர்க்கலோகம் - இந்திரன் முதலான தேவர்கள்

* மஹர்லோகம் - முனிவர்கள்

* புனர்லோகம் - கிரகங்கள், நட்சத்திரங்கள்,

* பூலோகம் - மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள். இந்த 7 உலகங்களும் பூமிக்கு மேல்பகுதியில் இருப்பவை.

* பூமிக்கு கீழ் பகுதியில் முதல் இரண்டு லோகங்களில் அசுரர்கள் வசிக்கின்றனர்.

* சுதல லோகம் - உலகளந்த நாராயணரால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி வசிக்கிறார்.

* தலாதல லோகம் - மாயாவிகள்

* மகாதல லோகம் - புகழ்பெற்ற அசுரர்கள்,

* பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்பு இனங்கள்

* ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.

X

Maalai Malar
www.maalaimalar.com