ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் திருவுருவத்திற்கு அனுமன் ஜெயந்தி அன்று 16 வகையான அபிஷேகம் நடத்தப்படும்.
ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிஷேகம்
Published on

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் பெரிய ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அனுமன் ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து இவரை வழிபடுகிறார்கள்.

அனுமன் ஜெயந்தி அன்று காலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, களபம், கஸ்தூரி, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான ஷோடஷ அபிஷேகமும் நடத்தப்படும்.

பின்னர் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com