புனித வாழ்வு தரும் புஷ்கர நீராடல்

‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.
புனித வாழ்வு தரும் புஷ்கர நீராடல்
Published on

12-10-2018 முதல் 23-10-2018 வரை

பிரம்மதேவரின் கையில் இருந்தது தீர்த்தம் ‘புஷ்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புஷ்கர தீர்த்தத்தை கடுமையான தவம் இருந்து பிரம்மதேவரிடம் இருந்து வரமாகப் பெற்றார், குரு பகவான். ‘புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகா புஷ்கரம்’ என்பது 144 (12x12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. அதன்படி இந்த ஆண்டு மகாபுஷ்கரம் நடைபெறுகிறது.

நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள், 12 ராசிகளுக்குஉரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி விருச்சிக ராசிக்குரியதாக தாமிரபரணி நதி சொல்லப்பட்டு ள்ளது. குரு பகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசியில் குரு சஞ் சரிப்பதால், தாமிரபரணியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் அவர்களின் தேவியர்கள், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பார்கள்.

நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவை என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர்கள், அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.

அகத்தியரை ‘தென் நாடு செல்க’ எனக் கட்டளையிட்டார், சிவபெருமான். அதற்கு அகத்தியர், தனக்கு அங்குள்ள தமிழ் மொழியை உணர்த்தும்படி வேண்டினார். சிவபெருமானும், அகத்தியரை தன் அருகே அமர வைத்து தமிழ்மொழியைக் கற்பித்தார். பின்னர் அங்கிருந்து பொதிகைமலை வந்து அமர்ந்த அகத்தியர், கடும் தவம் செய்தார். அவர் முன் தோன்றிய சூரிய பகவான், அகத்தியருக்கு தமிழ் இலக்கணங்களை கற்றுக் கொடுத்தார்.

இதையடுத்து முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராய் இருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். இந்த நிலையில் அகத்தியர் நீராடும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார். அந்த நதி தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அதற்கு ‘தாம்பிர வர்ணி’ என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அதுவே மருவி ‘தாமிரபரணி’ என்றானது.

அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான திருக் கோவில்கள் உள்ளன. பாபநாசம் முதல் புன்னக்காயல் (முகத்து வாரம்) வரையான இதன் கரையோரத்தில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை படித்து றையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத் திருவிழா தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி புஷ்கரம் ஆரம் பம். 23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் விழா பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.

இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. 12-ந் தேதி (வெள்ளி) - விருச்சிகம், 13-ந் தேதி (சனி)- தனுசு, 14-ந் தேதி (ஞாயிறு) - மகரம், 15-ந் தேதி (திங்கள்)- கும்பம், 16-ந் தேதி (செவ்வாய்) - மீனம், 17-ந் தேதி (புதன்) - மேஷம், 18-ந் தேதி (வியாழன்) - ரிஷபம், 19-ந் தேதி (வெள்ளி) - மிதுனம், 20-ந் தேதி (சனி) - கடகம், 21-ந் தேதி (ஞாயிறு) - சிம்மம், 22-ந் தேதி (திங்கள்) - கன்னி, 23-ந் தேதி (செவ்வாய்) - துலாம்.

ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக் குரிய தேதி, கிழமையில் தாமிரபரணி நதியில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத் தலைவரோடு தொலை தூரத் திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எது வோ, அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட் களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமமானது.

இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய் வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ முக்தியை அளிப்பதாக சொல்லப்படுகிறது. நல்ல பசுவைத் தானம் செய்வதால், மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இது தவிர புஷ்கரம் தங்கியிருக்கும் 12 நாட்களிலும், தாமிர பரணி நதிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ரு தோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலுவும் பெறும். பாபநாசம் முதல் புன்னக்காயல் வரையான 143 படித்துறைகளில் எவற்றில் வேண்டுமானாலும் நீராடலாம், தானம் செய்யலாம், திதி கொடுக்கலாம்.

சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாகும்.

திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராட லாம். துறவு வாழ்க்கை மேற்கொள்பவர்கள் அதி காலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.

நவக்கிரகங்களில் குரு பகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புத்திர பாக்கியத்திற்கு காரணகர்த்தா இவரே. குரு பகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற தலங்களிலும், குரு பகவான் சஞ்சாரத்தால் சிறப்பு பெறும் புஷ்கர நதியிலும் நீராடினால் புத்திரப்பேறு கிடைப் பது நிச்சயம். அந்த வகையில் தாமிரபரணியில் நீராடுவது சிறந்த பலனைத் தரும். குரு திசை, குரு புத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், புஷ்கர நாளில் தாமிரபரணியில் நீராடினால் புதுவாழ்வு பூக்கும்.

ராசிகளுக்குரிய நதிகள்

மேஷம் - கங்கை

ரிஷபம் - நர்மதை

மிதுனம் - சரஸ்வதி

கடகம் - யமுனை

சிம்மம் - கோதாவரி

கன்னி - கிருஷ்ணா

துலாம் - காவிரி

விருச்சிகம் - தாமிரபரணி

தனுசு - சிந்து

மகரம் - துங்கபத்ரா

கும்பம் - பிரம்மநதி

மீனம் - பிரணீதா

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com