

வீரபத்திரர் அவதார கதை-சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் தோன்றிய வீரபத்திரர்
தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார்.
தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார்.
அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணை போன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார்.
இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார்.
அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின.
அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார்.