ஸ்ரீ ராமர் வந்து தவம் புரிந்த காசிவிஸ்வநாதர் திருக்கோவில்

நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில் தான் தங்க வைத்தார். மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.
ஸ்ரீ ராமர் வந்து தவம் புரிந்த காசிவிஸ்வநாதர் திருக்கோவில்
Published on

மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

ராவணனைக் கொல்ல உருத்திராம்சம் பெற வேண்டி ராமர் இங்கு வந்து தவம் புரிந்து சிவ பெருமானை வேண்டினார்.

சிவ பெருமானும் ராமருக்கு உத்திராட்ச ஆரோகணம் கொடுத்தார்.

நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில் தான் தங்க வைத்தார்.

மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

காசியிலிருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி இருக்கிறது. இறைவனும் மேற்குத் திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

இங்குள்ள அம்பிகை தெற்கு திசையில் இருக்கிறார். அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.

நவகன்னி கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

முதலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, நடுவில் காவிரி அடுத்து கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரயு என்று வரிசையாக இருக்கிறார்கள்.

இதில் கங்கை மட்டும் சங்கு, சக்கரம் அபய வரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com