புனிதம் தரும் பஞ்சகவியம்

பஞ்சகவ்யத்தைத் தமிழில்“ஆனைந்து” என்று அழைப்பார்கள். பசுவின் பால் ஐந்து பங்கு. பசுவின் தயிர் மூன்று பங்கு. பசுவின் நெய் இரண்டு பங்கு.
புனிதம் தரும்  பஞ்சகவியம்
Published on

பசுக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது பஞ்சகவ்யம் ஆகும். பசுவின் கோமூத்திரம், கோமயம் (பசுஞ்சாணம்) பால், தயிர், நெய் இவைகளின் கலவையை பஞ்சகவ்யம் என்பர்.

கோமூத்திரத்திற்கு வருணனும், கோமயத்திற்கு (பசுஞ்சாணம்) அக்கினியும், பாலிற்கு சந்திரன், தயிர்க்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் ஆவர்.

மின்னும் செந்நிற பசுவிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப் பசுவினிடம் கோமயத்தையும்,

பொன்னிறந்து பசுவிடத்துப் பாலையும், நீலநிறத்து பசுவினிடம் தயிரினையும், கருநிறத்து பசுவினிடம் நெய்யினையும் பெறுதல் மிகநன்று.

கோமூத்திரம், கோமயம் இரண்டும் ஆறு மாத்திரை எடையளவு இருத்தல் வேண்டும்.

இதை மந்திரப் பூர்வமாக கலந்து பிராம்ண சந்நிதியில் உண்டவன் சகல பாபத்தினின்றும் நீங்கி சுத்தமடைகிறான் என்று அபிதான சிந்தாமணி என்கிற நூல் கூறுகிறது.

பசுவின் பால் ஐந்து பங்கு. பசுவின் தயிர் மூன்று பங்கு. பசுவின் நெய் இரண்டு பங்கு.

பசுவின் நீர் ஒரு பங்கு. பஞ்சாணம் கைப் பெருவிரல் அளவில் பாதியும் சேர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இறைவழிபாட்டில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் முதலானவற்றில் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்வார்கள்.

இந்த பஞ்சகவ்யத்தை உண்டால் நாட்பட்ட நோய்கள் அகலும். வியாதிகள் வராமலிருக்க தடுப்பாகவும் இருக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கும் பொழுது காயத்ரி மந்திரத்தைச் சொல்லி கோமூத்திரத்தையும், "கந்தத்த வாரம்" என்ற

மந்திரத்தால் பஞ்சாணத்தையும் ஆபயா யஸ்ப என்று தொடங்கும் மந்திரத்தால் பசுந்தயிரையும் "சூக்ரமஸி" என்று

தொடங்கும் மந்திரத்தால் பசு நெய்யையும் மந்திரித்து சேர்த்தால்தான் பஞ்சகவ்யம் உருவாகும்.

இதுதான் சக்திவாய்ந்தது.

பஞ்சகவ்யத்தைத் தமிழில்"ஆனைந்து" என்று அழைப்பார்கள்.

ஆயுர்வேதத்திலும் பஞ்சகவ்யம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

நரம்புத் தளர்ச்சிக்கும், காக்காய் வலிப்பு நோய்க்கும் பஞ்சகவ்யம் நல்ல மருந்து என்பர்.

புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com