நவராத்திரி ஒன்பதாம் நாள்

இவள் மிகவும் கோபக்காரி. நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
நவராத்திரி ஒன்பதாம் நாள்
Published on

நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.

தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள்.

முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள்.

இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.

இவள் மிகவும் கோபக்காரி.

நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது.

அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

X

Maalai Malar
www.maalaimalar.com