முதல் படி எடுத்து வைத்தால் போதும் ! உச்சிவரை அழைத்து செல்வான் முருகன்!

இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிப்பாறுவதை உணர முடியும். 1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம். 1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம்.
முதல் படி எடுத்து வைத்தால் போதும் ! உச்சிவரை அழைத்து செல்வான் முருகன்!
Published on

இத்தலத்து முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார்.

எனவே இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கிறது.

பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும்.

தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன.

இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அபே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிப்பாறுவதை உணர முடியும்.

1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம்.

நீங்கள் முதல் படியில் காலை எடுத்து வைத்தால் போதும், அதன்பிறகு அப்பன் முருகன் நம்மை மலை உச்சிவரை வரவழைத்து விடுவான்.

எப்படி ஏறினோம். எப்படி இறங்கினோம் என்பதே தெரியாது.

அதிலும் மலையில் உள்ள சுனைத்தீர்த்தம் ஏதாவது ஒன்றில் சற்று நீராடினால் போதும், மலை ஏறி வந்த அலுப்பு தெரியவே தெரியாது.

புனித நீராடி விட்டு முருகனை நெருங்கும் போது நிச்சயம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com