முந்நூறு வகை பொருட்களை கொண்டு திருமுழுக்காட்டு

மூந்நூறு வகைப் பொருள்களைப் படைத்து ஆகம விதிப்படி அமிர்தகடேசுவரரை பூசித்து திருமுழுக்காட்டுவார்கள்.இது இத்தலத்திற்குரிய சிறப்பான விழாவாகும்.
முந்நூறு வகை பொருட்களை கொண்டு திருமுழுக்காட்டு
Published on

கார்த்திகை மாதம் சோமவாரமான திங்கட்கிழமைகளில் மாலையில் சங்கு மண்டபத்தில் 1008 வலம்புரிச் சங்குகளை பரப்பி அவைகளின் மேல் மார்க்கண்டேயரின் கங்கா தீர்த்தத்தை நிரப்புவார்கள்.

மருந்து வகைகள், தானியங்கள், பச்சிலைகள், பழவகைகள், நவரத்தினங்கள், உலோகங்கள், எண்வகை மண் இப்படி மூந்நூறு வகைப் பொருள்களைப் படைத்து ஆகம விதிப்படி அமிர்தகடேசுவரரை பூசித்து திருமுழுக்காட்டுவார்கள்.

இது இத்தலத்திற்குரிய சிறப்பான விழாவாகும்.

இத்திருமுழுக்காட்டின்போது கவனித்தால் காலனின் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை உதைக்க இறைவன் லிங்கத்தில் இருந்து தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் உண்டான லேசான பிளவும் காணலாம். 

X

Maalai Malar
www.maalaimalar.com