மூலிகை வனங்களின் தொகுப்பு - தோரணமலை

தோரணமலையில் மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது. அதனால்தான் சித்தர்கள் இந்த மலையை நாடி வந்துள்ளனர்.
மூலிகை வனங்களின் தொகுப்பு - தோரணமலை
Published on

தோரணமலையில் மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது.

அதனால்தான் சித்தர்கள் இந்த மலையை நாடி வந்துள்ளனர்.

பாறைகள் அதிகமாகவும், மண் குறைவாகவும் நிறைந்துள்ள இந்த இடத்தில் இவ்வளவு மூலிகைகளா என்ற அதிசயிக்கும் வண்ணம் உள்ளது, இம்மலை.

பொதுவாகவே மலைப்பகுதியில் வளரும் மூலிகைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

காரணம் இங்கு மூலிகைகள் இயற்கையாகவே வளர்கின்றன.

யாரும் உரமிடுவது கிடையாது. தண்ணீர் ஊற்றுவது இல்லை.

இயற்கையாக உள்ள கல்லும், மண்ணும், மழையும், ஒளியும்தான் அதற்கு உணவு.

அதோடு இரண்டுக்கும் மேலான மூலிகைகள் ஒட்டாக வளர்ந்தால் அதற்கு தனிச் சிறப்பு. இவைகள் எல்லாம் மலைப்பகுதியில்தான் இருக்கும்.

தோரணமலை மூலிகையின் தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு கோடையிலும் வற்றாத சுனைகள் பல உள்ளன.

அந்த சுனை நீர் ஊற்று மூலம் பல மூலிகைள் கோடை காலத்தில் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.

இதனால் மூலிகை வனமாக விளங்கும் தோரணமலையை நாடி பல சித்தர்கள் வந்துள்ளனர்.

வழிபாட்டு நேரம்

சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன.

திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர்.

மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன்.

செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.

மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். 

X

Maalai Malar
www.maalaimalar.com