

அசுரர்களை அழிக்க வேண்டுமானால் இறைவன் தவக்கோலத்திலிருந்து மீள வேண்டும்.
இதற்காகப் பிரம்மா, விஷ்ணு தேவர்கள் அனைவரும் மன்மதனின் உதவியை நாடினர்.
இவர்களின் விருப்பப்படியே மன்மதன் தன் பானத்தை மகேஸ்வரன்மேல் தொடுத்தான்.
இச்செயலால் கோபம் கொண்ட ருத்ரன் தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார்.
இறைவனின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் பந்தநல்லூரக்கும் இடையே உள்ள
திருவாளப்புத்தூருக்குத் தென் கிழக்கே உள்ள வரதம்பட்டு என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும்
மன்மத பரமேஸ்வர லிங்கத்திற்குப் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும்.